Skip to playerSkip to main content
  • 2 minutes ago
கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் செல்லும் வழியில் ராட்சத மரம் விழுந்த நிலையில், அதனை சுற்றுலாப் பயணிகளே அப்புறப்படுத்தியுள்ளனர்.கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் என்பது தமிழகத்தில் மிகவும் பிரபலமான பகுதியாகும். இங்கு ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கே, தமிழகத்தில் இரண்டாவது யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. அதில், கலீம், சின்னதம்பி, இரண்டு குட்டி யானைகள் உட்பட 28 யானைகள் வனத்துறை பராமரிப்பில் உள்ளது.இதனைக் காண டாப்ஸ்லிப் இருந்து வனத்துறை வாகனத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றன. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.இந்நிலையில், டாப்ஸ்லிப் செல்லும் வழியில் அடர் வனப்பகுதியில் இருந்த இரண்டு ராட்சத மரங்கள் திடீரென சாலையில் குறுக்கே விழுந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.மரம் சாலையில் விழுந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்களே முன்வந்து, மரங்களை வெட்டி, அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Category

🗞
News
Transcript
00:00Thank you for listening.
00:44Thank you for listening.
01:15Thank you for listening.
Comments

Recommended